பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

ஊரும் பேரும்


நாகளேச்சுரம்

தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் குழிக்கரை என்னும் ஊரில் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. அதன் பெயர் திரு நங்காளிச்சுரம் என்று சாசனம் கூறும்.5 திருநாவுக்கரசர் குறித்த நாகளேச்சுரம் இத் திருக் கோயிலாயிருக்கலாம் என்று தோன்றுகின்றது.

கோடிச்சுரம்

தஞ்சை நாட்டில் கும்பகோணத்திற்கு அருகே காவிரி யாற்றின் வடபால் கோடீச்சுரம் கோடிச்சுரம் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் தேவாரத்தில்,

“கொடியொடு நெடுமாடக் கொட்டை யூரில்
கோடீச் சுரத்துறையும் கோமான் தானே"6

என்று போற்றும் பெருமை சான்றது இப்பதியே யாகும்.கொடியாடும் மாடங்கள் நிறைந்த கொட்டை யூரில் கோடீச்சுரம் என்னும் திருக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கும் பான்மை இப் பாசுரத்தால் இனிது விளங்கும். கொட்டைச் செடிகள் நிறைந்திருந்த காரணத்தால் கொட்டையூர் என்னும் பெயர் அவ்வூருக்கு அமைந்த தென்பர். அத் தலத்திற் கோயில் கொண்ட பெருமானது திருமேனி பல சிவலிங்கங்களால் அமைந்த தென்பதும், அவரை வழிபட்டார் கோடி லிங்கங்களை வணங்கிய பயனைப் பெறுவர் என்பதும் புராணக் கொள்கை.

கொண்டீச்சுரம்

நன்னிலத்துக் கருகேயுள்ளது கொண்டீச்சுரம் என்னும் சிவாலயம். இது திருநாவுக்கரசரால் கொண்டிச்சுரம் பாடப்பெற்றது; திருக்கண்டீஸ்வரம் என இப்பொழுது வழங்குகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப் பெயரும் ஆயிற்று.