260
ஊரும் பேரும்
சோழிச்சுரம் திருநாவுக்கரசர் தேவாரத்திற் குறித்த குக்குடேச்சுரமாயிருத்தல் கூடும். :
அக்கீச்சுரம்
தஞ்சை நாட்டில் காவிரியின் வட கரையில் உள்ள கஞ்சனூர் திருநாவுக்கரசரது பாமாலை பெற்ற பதியாகும். அங்கித் தேவன் அங்கு ஈசனை வழிபட்டான் என்னும் ஐதீகம், “அனலோன் போற்றும் காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை” என்னும் தேவாரத்தால் அறியப்படும். அக்காரணத்தால் கஞ்சனூர்ச் சிவாலயம் அக்கீச்சுரம் என்று பெயர் பெற்றது. இப்பொழுது அக்கினிசுரர் கோயில் என வழங்கும் திருக்கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் திருவக்கீச்சுரம் என்று அதனைக் குறிக்கின்றது. எனவே, திருநாவுக்கரசர் கூறியருளிய அக்கீச்சுரம் கஞ்சனூரிலுள்ள ஆலயம் என்று கொள்ளலாகும்.
இன்னும், ஈசனார்க் குரிய கோயில்களைக் கூறும் அத் திருப்பாசுரத்தில்,
“ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனிச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண்காணல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்றென் றேத்தி
இறைவன்உறை சுரம்பலவும் இயம்பு வோமே”
என்று அருளிப் போந்தார் திருநாவுக்கரசர். இவ்விச் சுரங் களை முறையாகக் காண்போம்:
ஆடகேச்சுரம்
திருவாரூரில் உள்ள திரு மூலட்டானம் என்னும் பூங் கோயிலின் உட் கோயிலாக ஆடகேச்சுரம் அமைந் துள்ளது. புற்றிடங் கொண்டார் கோயிலுக்குத் தென் கிழக்கே நாகபிலம் என்று சொல்லப்படும் ஆலயமே ஆட