பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

277


பாண்டீச்சுரம்

பாண்டி நாட்டு ஆழ்வான் கோயில் என்னும் ஊரில் திருப் பாண்டீச்சுரம் அமைந்திருந்த தென்று பழனி வட்டத்திலுள்ள பெரிய கோட்டைச் சாசனம் கூறுகின்றது.7

சோழீச்சுரம்

குறுநில மன்னராகிய முத்தரசரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றி அரசாண்ட விசயாலயசோழன் பெயரால் அமைந்த கற்கோயில் புதுக் கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலையில் உள்ள தென்பர். விசயாலய சோழீச்சுரம் என்பது அதன் பெயர்.8

ஆதித்தேச்சுரம்

திரு நல்லம் என்பது தேவாரப் பாடல் பெற்ற நகரம்.

“நல்லம் நல்லம் எனும்பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் துநெறி சேர்வரே”

என்ற திருப்பாட்டு பெற்றது அப்பதி. திருநல்லச் சடை யார்க்குச் செம்பியன் மாதேவி கற்கோவில் கட்டினாள் என்றும், அக்கோயிலுக்குத் தன் கணவராகிய கண்டராதித்தர் பெயரை அமைத்தாள் என்றும் கல்வெட்டுக் கூறுகின்றது.9 இங்ஙனம் அவர் பெயரால் அமைந்த திருக்கோயில் ஆதித்தேச்சுரம் என வழங்கலாயிற் றென்பர். அங்குள்ள ஈசன் திருவடியைத் தொழுகின்ற பான்மையில் கண்டராதித்தர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.10

இராஜராஜேச்சுரம்

தஞ்சை நகரத்தின் நல்லணியாகத் திகழும் பெரிய கோவில் இராஜராஜன் என்னும் பெருநில மன்னனது