பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

ஊரும் பேரும்


“தூவாயா, தொண்டு செய்வார்படு துக்கங்கள் காவாயா"2

என்று உருக்கமாகப் பாடியருளினார் சுந்தரர். அத்திருப் பாட்டின் அடியாகத் தூவாய் நயினார் என்ற பெயர் அப்பெருமானுக்கு கோயில் வழங்கலாயிற்று. நாளடைவில் அப் பெயர் துலா நயினார் என மருவிற்று. எனவே, பழைய மண்தளி இப்பொழுது துலா நயினார் கோயில் என வழங்குகின்றது.3

வைத்தீஸ்வரன் கோயில்

சிதம்பரத்துக்கு அண்மையில் உள்ள புள்ளிருக்கு வேளுர் என்னும் ஊர், பாடல் பெற்றதாகும். அங்கு அமர்ந்தருளும் பெருமானைச் சடாயு என்ற வைத்தீஸ்வரன் புள்ளும், நால் வேதங்களுள் கோயில் ஒன்றாகிய இருக்கு வேதமும், முருக வேளும் தொழுது அருள் பெற்றமையால், புள்ளிருக்கு வேளுர் என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்று புராணம் கூறும். அப் பதியில் கோயில் கொண்ட ஈசனை அருமருந்தாகக் கண்டு போற்றினர் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும்.

“செடியாய உடல் தீர்ப்பான்
தீவினைக்கோர் மருந்தாவன்”

- என்பது திருஞான சம்பந்தர் திருவாக்கு. “மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்” என்பது திருநாவுக்கரசர் பாட்டு. இருவர் திருவாக்கின் பண்பும் பயனும் உணர்ந்த அடியார்கள், வினை தீர்த்தான் என்றும், வைத்தீஸ்வரன் என்றும் புள்ளிருக்கு வேளுர்ப் பெருமானைப் போற்றுவா ராயினர்.4 இக் காலத்தில் வைத்தீஸ்வரன் கோயில் என்பது திருக் கோயிலின்