பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

ஊரும் பேரும்


மானாமதுரை;வடமதுரை

பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையும் ஆன்ற பெருமை வாய்ந்ததாகும். தமிழும் சைவமும் தழைத் தோங்கக் கண்ட அந்நகரின் பெயரை ஏற்றுத் திகழ்வது மானா மதுரை.மான வீரன் மதுரை என்பது மானா மதுரை யாயிற்று என்பர். சோழ நாட்டில் ஓர் ஊர் வடமதுரை என்று பெயர் பெற்றுள்ளது.

திருஆலவாய் நல்லூர்

மதுரையில் அமைந்துள்ள சிவாலயம் திரு ஆலவாய் ஆகும். அத்திருக்கோயிலின் பெயரைக் கொண்ட திரு ஆலவாய் நல்லூர் என்ற ஊர் மதுரை நாட்டு நிலக்கோட்டை வட்டத்தில் உள்ளது.

திரு இராமேச்சுரம்

பாண்டி நாட்டிலுள்ள இராமேச்சுரம் பெரும் புகழ் வாய்ந்தது. அங்குள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றையும் சைவ உலகம் தலைக் கொண்டு போற்றும். அதன் பெருமையால் சோழ நாட்டிலும் ஓர் இராமேச்சுரம் உண்டாயிற்று. நெடு மணல் என்று முன்னாளில் பெயர் பெற்றிருந்த ஊரில் இராமேச்சுரம் என்ற கோயில் எழுந்ததென்பது சாசனத்தால் விளங்கும்.9 இப்பொழுது கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்று.

குற்றாலம்

தென்பாண்டி நாட்டில் இயற்கை அழகும் இறைவன் அருளும் வாய்ந்த சீருர் திருக்குற்றாலம்.அதன் பெருமையைக் கண் களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர்,

“கொம்பார் சோலைக் கோலவண்டு யாழ்செய் குற்றாலம்"