தேவும் தலமும்
313
“செம்பியார்கோன் திருநாகேச் சுரம்போல் எதும்
திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி"ச்<poem>
சேக்கிழார் வழிபட்டார் என்பது சரித்திரம். ஆகவே, சோழ நாட்டுத் திருநாகேச்சுரத்தின் பெயர் தாங்கித் தொண்டை நாட்டுக் குன்றத்துருக்கு அருகே மற்றொரு திருநாகேச்சுரம் இன்று விளங்கு கின்றது.
வட பழனி
பழம் பெருமை வாய்ந்த முருகப் பதிகளுள் ஒன்று பழனி என்பதை முன்னமே கண்டோம்.அப்பதியில் தண்டாயுத பாணியாகக் காட்சி தரும் முருகனை இப்பொழுது சென்னை மாநகர்க்கு அருகேயுள்ள கோடம்பாக்கத்திற் கண்டு அன்பர்கள் வழிபடத் தொடங்கியுள்ளார்கள். அங்கு எழுந்துள்ள முருகன் கோயில் வடபழனி என்று வழங்கப் பெறுகின்றது.
அடிக் குறிப்பு
1. இதனால் பஞ்சவன் என்ற பெயரும் பாண்டியற்குரிய தாயிற் றென்பர்.
2. திருவக்குளம் என வழங்கும் திருவேட்களமே இப்பொழுது அண்ணாமலை நகரமா யிருக்கின்றது. அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற ஐதிகம் இத்தலத்திற் கொண்டாடப்படுகின்றது.
3. சேரன் செங்குட்டுவன் (மு. ரா.)
<poem>4.நன்றுடையானைத் தீயதில்லானை..சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.”
5. இவ்வாறு திரு என்ற அடை, திரி என மாறுதலைத் திருகோணமலை திரிகோணமலை யென வழங்குதலாலும்
அறியலாம்.