பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

325


காலத்தில் ஒரு பெரும்போர் நிகழக் கண்டது அவ்வூர். கோச்செங்கட்சோழன், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர நாட்டு மன்னனை வென்று சிறை பிடித்த களம் திருப்பேர்ப் புறமாகும். எனவே, சைவ, வைணவக் கோயில்களை யுடைமையால் சிறப்புற்ற திருப்பேர் என்ற ஊர் சரித்திர சம்பந்தமும் உடையதென்று தெரிகின்றது.

சாத்தங்குடி

திருவாரூர்த் திருத்தாண்டகத்தில் சாத்தங்குடியிற் காட்சி தரும் ஈசன் பெருமை பேசப்படுகின்றது.

“எல்லோரும் சாத்தங் குடியிற்காண இறைப்பொழுதில் திருவாரூர்ப் புக்கார் தாமே”

என்பது திருநாவுக்கரசர் பாட்டு. இப் பாசுரத்திற் குறித்த சாத்தங்குடி, பாடல் பெற்ற திருப்புன்கூருக்கு ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது. தனிச் சாத்தங்குடி என்று திருநாவுக்கரசர் குறித்தவாறே இன்றும் அவ்வூர் முற்றும் கோயிலுக்கே உரியதாக உள்ளது.22

உருத்திரகோடி

திருக்கழுக் குன்றத்தின் அடிவாரத்தி லுள்ள சங்கு தீர்த்தம் என்னும் திருக்குளத்திற்குத் தென் கிழக்கில் உருத்திர கோடீச்சுரம் உள்ளது.

கொண்டல்

“கொண்டல் நாட்டுக் கொண்டல்” ஈசன் கோயில் கொண்ட இடம் என்பது சுந்தரர் தேவாரத்தால் அறியப்படும். சீர்காழிக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் உள்ள கொண்டல் வண்ணன் குடியே இப் பதி என்பர். கொண்டல் வண்ணனாகிய திருமால் விரும்பிய வண்ணம் ஈசன் எழுந்தருளி, முருக வேளால்