பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஊரும் பேரும்

வண்ணமே தென்ஆர்க்காட்டுத் திருக்கோயிலூர் (திருக்கோவலூர்) வட்டத்திலுள்ள நெற்குன்றமும் நெற்குணம் என வழங்கும்.M.E. R 1934-35. பூங்குன்றம் என்பது பூங்குணம் என மருவியுள்ளது. M. E. R. 1922-23.

13. வட ஆர்க்காட்டில் குன்றம், குண்ணம் என வழங்கும், குண்ணத்தூர் ஆர்க்கோண வட்டத்திலும், குண்னவாக்கம் செய்யாற்று வட்டத்திலும் உள்ளன.

14. தென் ஆர்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் ஒரு பாறையின் அருகே எழுந்த நல்லூர் ‘அறையணி நல்லூர், என்று பெயர் பெற்றது. அறையின் அணித்தாக உள்ள நல்லூர் என்பது அப்பெயரின் பொருள். தேவாரப் பாடல் பெற்ற அவ்வூர் இப்பொழுது அரகண்டநல்லூர் என்று வழங்குகின்றது.

15. சுமார் ஆயிரத்து இருநூற்று இருபதடி உயரமும், நானுறடி நீளமும் முந்நூறடி அகலமும் உள்ள அப்பாறையின் மீது ஒரு கோட்டை கட்டப்பட்டுள்ளது. பாறையுச்சியில் பழுதுற்ற கோயிலொன்று காணப்படுகின்றது. M.M. Vol. 1. D,277.

16. இவ்வூரின் நடுவே ஒரு பாறை யுள்ளது. அதன் மேற்புறத்தில் நரசிங்கப் பெருமாளும், கீழ்ப்புறத்தில் அரங்கநாதரும் கோயில் கொண்டுள்ளார்கள். நாமக்கல் என்ற பெயருக்குப் பொருத்தமாக ஒரு பெரிய நாமம் அப்பாறையிலே சாத்தப்பட்டுள்ளது.

17. விருத்தாசலத்தின் பழம் பெயர் முதுகுன்றம் என்பதாகும்; அது பழமலை யென்றும் வழங்கியதாகத் தெரிகின்றது. வேதாசலம் என்பது திருக்கழுக்குன்றத்தின் பெயர் வேங்கடாசலம் என்பது திருப்பதி மலை.

18. மதுரை மீனாட்சியம்மை குறம், குறிஞ்சிநிலத் தலை வனாகிய கண்ணப்பரின் தந்தையை “இருங்குறவர் பெருங்