பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடும் நகரமும்

49

86. எழுபதடி உயரமும், நூற்றிருபதடி அகலமும் உடையது அக்குளத்தின் கரை.

87. வான மாரியால் நிறையும் குளத்தை வானமளிக்குளம் என்பர். அப் பெயர் மானா மாரிக் குளம் என மருவி வழங்கும்.

88. 403 of 1907.

89. 337 of 1908; M. E. R. 1933-34.

90. 53 of 1907.

91. 73 of 1908; I. M. P., p. 122.

92. பெரு நிலம் உடையாரைப் பண்ணையார் என்பர்.

93. 187 of 1925.

94. சங்க இலக்கியத்தில் ஊரன் என்ற சொல் மருத நிலத் தலைவனைக் குறிக்கும். ‘தண்டுறை ஊரனை’ ஐங்குறுநூறு, 88.

95. கோழியூர் என்பது சோழ நாட்டின் பழைய தலைநகராகிய உறையூரின் பெயர், “கோழி உறையூர்” - பிங்கல நிகண்டு.

96. இவ்வூர் இராமநாதபுர நாட்டில் உள்ளது.

97. “பெண்ணைத்தென்பால் வெண்ணெய் நல்லூர்” சுந்தரர் தேவாரம்.

98. “சேயடைந்த சேய்ஞலூர்” என்பது தேவாரம். சூரனோடு போர் செய்யக் கருதி எழுந்த முருகவேள். சிவபெருமானை வழிபட்டுச் சர்வ சங்காரப் படைக்கலம் பெற்ற ஸ்தலம் சேய்நல்லூர் (சேய்ஞலூர்) என்று கந்த புராணம் கூறும் -குமாரபுரிப் படலம், 14-15, 75-76.

99. “அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில் வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆமால்” - தடுத்தாட்கொண்ட புராணம், 23.

100. (yp#553.507 – The Fishery Coast.

101. The Pandyan Kingdom, p. 191.