பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

8 179

சர்வ மானியம் நடத்தப்பட்டு துலுக்கர் மதாச்சாரம் பிரபலப்பட்டு இருக்கிறது.

தோட்டத்தில் தென்னை மரங்கள் மிகுந்து இருக்கிறது. பாக்குமரம் பலாமரம் கிச்சிலி மரம் எலுமிச்சமரம் மாமரம் இவைகள் கொஞ்சங் கொஞ்சம் இருக்கின்றன. சந்தன மரங்கள் உண்டு. அந்த விதைகள் விழுந்து இப்போது செடிகள் ரொம்பவும் இருக்கின்றன. தோட்டத்தைச் சுற்றிலும் வேலி போடாது இருக்கிறது.

-தரியாபத்து நிட்டல நாயன அய்யன்.

(மக்பரா - சமாதிக்குமேல் உள்ள வட்ட வடிவ டூம்! இச்சொல் மொகற்பா என்று எழுதப்பட்டுள்ளது.)

  • தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடி நூலகம் சென்னை. எண் ஆர் 8275, டி. 3021; பள்ளிவாசல் நிர்வாகிகட்கு இந்த ஆவண நகல் வழங்கப் பட்டுள்ளது.