புலவர் செ. இராசு
193
13
நடக்கிற துருக்குகள் தெரியச் சொல்ல
திவான்சாய்பே நாமசேதிகள் எல்லாம் தெரியச்சொல்லி இதுயிதுவிபரமென்று அவர் இன்பமுடனே உரைக்கலுமே
லாலா சாத்துலகான்
நாளை காலமே பயணம் அறியுமென்றார்
சாத்தேரிக்கரைமேல் பெரியசெண்டாவும் அவருந்தான் போட்டார்
அன்று முகாமிருந்து மற்றாநாள்
ஆரணி யருகிலே போயிறங்கி
ஆரணி வெங்கிட ராவை அழைத்து
பொந்தியலவர் வந்து அன்று முகாமிருந்து
மற்றாநாள் போலூருறப் பட்டினில் போயிறங்கி
இரண்டுமூன்று நாளிருந்து கலசபாக்கம் தனியே
கணக்கவே நாலுமுகம் போயிறங்கி சிந்தாமல் சிதறாமல்
சிலுநாயக்கன் தெத்தடி செக்கினில் போயிறங்கி
அந்தரங்கமாகவே அவனுக்கு அந்தப்புறத்திலே ஆள்போகவிட்டு யெந்தவிதத்திலேயும் சிலுநாயக்கன் யெப்படி யாகிலும்
கைப்பிடியாய்க் கொண்டுவர வேணுமென்று
மனிதர் கொக்கரித்தே மலையேற லுற்றார்
அவனண்டையில் இருந்தவர்கள் நாங்கள்
பெண்டுகளே அல்லாமல் வேறொரு
மொண்டி சிலு நாயக்கனைக் காணோமென்றார்
அகப்பட்ட பேரையெல்லாம் நம்முட
ஆற்காட்டுக்கே கொண்டுபோ என்றார்
நகைத்துடன் சாத்துலகான் நல்லதென்று சம்மதித்து
திருவருணாமலைதனிலே தண்டு செயமாய்
வந்து யிறங்கியபின் மறுநா ளானபின்பு
வகையுள்ள றங்கப்ப செட்டியவாள் சேர்ந்தபின்
சிலுநாயக்கன் பெண்டுகள் சிக்கின பேறெல்லாரையும்தான்
கைகால் வாங்கச்சொல்லி அவர்களை
கணக்கவே அயிராணி பண்ணலுற்றனர்.
- முற்றுப்பெறவில்லை
- தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண் டி. 3809 தொண்டை மண்டல வரலாறுகள், மேற்படி நூலக வெளியீடு.
பக்கம் 244-248