இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112
தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்
மேலும்,வஞ்சிப் போரில் பங்கு கொண்டவன் குளமுற்றத்தான் என்று மட்டும்தான் கூறப்பட்டுளதே அன்றி,அப்போரில், அவனுக்குத் துணையாகக் குராப்பள்ளியானும் சென்றான் என்பது குறிப்பிடப்படவில்லை.
ஆக, இவ்வுண்மைகளாலும், அந்நூலில்23 பிட்டங் கூற்றனைப் பற்றிக் கூறப்பட்டன எல்லாம், வரலாற்று உண்மைகளுக்கு அப்பாற்பட்ட, பொருந்தாக் கூற்றுக்களாம் என்பது உறுதிசெய்யப்பட்டது.