பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சான்றெண் விளக்கம்

1. சிலப்பதிகாரம்:

புறஞ்சேரி இறுத்த காதை; 13:115-184

காழ் அகில் சாந்தம், கமழ்பூங் குங்குமம்,
நாவிக் குழம்பு, நலம் கொள் தேய்வை,
மான்மதச் சாந்தம், மண்ம் கமழ் தெய்வத்
தேமென்.கொழுஞ் சேறு ஆடி: ஆங்கு,
தாதுசேர் கழுநீர், சண்பகக் கோதையொடு,
மாதவி, மல்லிகை, மனைவளர் முல்லைப்
போதுவிரி தொடையல் பூ அணைபொருந்தி:
அட்டிற் புகையும், அகல் அங்காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்,
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த
அந்தீம் புகையும், ஆகுதிப் புகையும்,
பல்வேறு பூம்புகை அளைஇ வெல் போர்
விளங்கு பூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்து உணர்வு-அறியா ஆர்உயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண் வரத் தோன்றி:
புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது, ஈங்கு
மதுரைத் தென்றல் வந்தது; காணிர்:
நனிசேய்த்து அன்று அவன் திருமலி மூதூர்:
தனி, நீர் கழியினும் தகைக்குநர்இல் என

2.மேலது 13:135-148 -

அருந் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும்,
பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்,