பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

"வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி"

"மனையுறை புறாக்கள்”

ஆகிய இரு இலக்கிய நூல்களை வெளியிட்டோம். சங்க கால அரசர் வரிசை, திருமாவளவன், அறம் உரைத்த அரசர், இலக்கியங்கண்ட காவலர், கலிங்கங் கண்ட காவலர், தமிழர் தளபதிகள், கழுமலப்போர், தமிழர் வாழ்வு, தமிழர் வாணிகம், பண்டைத் தமிழர் போர் நெறி, தமிழகத்தில் கோசர்கள், போன்ற வரலாற்று நூல்கள் பல படைத்த புலவர் அவர்கள், சங்க காலம் தொட்டு, இன்றுவரையான, தமிழக வரலாற்றைக், காலம் தோறும் தொகுத்து வரிசையாக எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அந்தப் பணியும் முற்றுப் பெறாது போனது. அந்தப் பணியில் அலர் எழுதி முடித்த வரலாற்றுப் படைப்புகளை,

தமிழக வரலாறு வரிசை என்ற பெயரில் வெளியிட முனைந்து, சென்ற ஆண்டு,

"தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்' "தமிழக வரலாறு---கோசர்கள்"

ஆகிய இரு வரலாற்று நூல்களை வெளியிட்டுளோம்.

தமிழக வரலாறு வரிசையின் மூன்றாவது நூலாக இன்று.

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான் என்ற இந்த நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக்கிறோம்.