என்.வி. கலைமணி என்னையும் ஆட்கொண்டு விட்டாய். அதனால் வரைகிறேன். என்னை மட்டுமா ஆட்கொண்டாய்? சிந்தையை சிந்தையை மட்டுமா? சிந்தை அணு ஒவ்வொன்றையும் உன் வயப்படுத்திக் கொண்டதால் அதையும் கூறிவிடுகிறேன். மயக்கும் மாலைப் பொழுதான அந்தி நேரத்திலே, தமிழக வீதிகளிலே நடைபெறும் பொதுக் கூட்டங்கள் தோறும் நீ உலா வருகிறாயே! கூட்டத்திலே குழுமியுள்ள மக்களது உள்ளங்களை எல்லாம், நீ சிக்க வைக்கிறாய்! கவருகிறாய்! கொள்ளை கொள்கிறாய். இதற்குக் காரணம் என்ன, உன் மீதுள்ள எல்லையற்ற பற்று, நீ வாடையா என்ன - வெறுப்பதற்கு தென்றலல் öyüᎫfᎢ ! நீயும் தமிழ் மண்ணிலே பிறந்து நடமாடுகின்ற வளல்லவா? அதனால்தான் தமிழ் உணர்வோடு, கூடியிருக்கின்ற பல லட்ச மக்களின் உள்ளங்களிலே இரண்டறக் கலக்கும் பண்பு பெற்றிருக்கிறாய்! வளர்கின்ற செந்நெல்லுக்கு மடைப்புனல் எப்படி அவசியமோ, அதைப் போல, வளர்கின்ற ஒரு சமுதாயத்திற்கு முதியவர்களும் அவசியமாகும். சமுதாய வளர்ச்சி சரியானதுதானா என்பதை அறிய - கற்றோர்களும் மற்றோர்களும் தேவை! மடைப்புனல், நீரை எப்படி முறையாக அனுப்பி செந்நெல்லுக்கு உரம் ஊட்டுகிறதோ, அதேபோல 143
பக்கம்:தமிழஞ்சலி.pdf/153
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை