தமிழஞ்சலி உனக்கு இருக்கும் நூறு கோடி கதிர்க் குதிரைகளைக் கருணையோடு என் சாம்ராஜ்யத்தில் புகுத்து, தாழ்ந்து போயிருக்கும் என் மானம், முளை விட்டுக் கிளம்பும் விதைக் குருத்தைப் போல கொஞ்சம் நிமிரட்டும். உனது வழக்கமான செம்முகத்தை எனது சிந்தனைக் கிளிகள், கொவ்வைப் பழம் என்று கடிக்க ஆரம்பிக் கின்றன: என் நாக்கில் விளையாடும் ஒளியலைகள் எங்கோ இருந்து வந்தவையல்ல! உன்னைக் கண்ட பிறகு - அது மகிழ்ச்சியால் நெளிந்த பிறகு, ஏற்பட்ட இசையாகும்! கதிரவனே! உனது புகழின் ஆழத்தை, உலகைச் சுற்றியிருக்கின்ற கடலும் கொண்டிருக்கவில்லை. உனது பெருமையின் உயரத்தை, உலகின்மேல் கொப் பளம் போல் குவிந் திருக்கும் மலைகள் , கொண்டிருக்கவில்லை. உனது விரிவு, திக்கை உடைத்துக் கொண்டு வெளியே செல்லுகிறது! உன்னுடைய விரிந்த விசாலத்தில், நான் ஒரு சொட்டு இயற்கையாகவே இருக்கின்றேன். என்னைக் கடையேற்ற, ஆயிரம் கோயில்களைக் கட்டியவன் நீ ஒரு நாளைக்குப் பத்தாயிரம் தடவைகள் பூசை செய்தவன் நீ! } 48
பக்கம்:தமிழஞ்சலி.pdf/158
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை