பக்கம்:தமிழஞ்சலி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி தாயே! இதுவும் உன் திருவிளையாடலா? தமிழர் மானத்தைக் கரைக்க ஓர் ஊழிப் பெருவெள்ளம் எப்போதும் படையெடுத்ததில்லை! எடுத்தால், அது - வென்றதுமில்லை, என்பதை நீ அறிவாயே - அம்மா தாயே! இப்போது ஒரு காய்ந்த இலையின் மீது, எறும்பு ஒன்று மிதந்து செல்கிறது.அதனுடைய முதத் தோற்றத்தைப் பார்க்கும்போது - உரிமை இழந்த - கடல் கடந்த தமிழர்களைப் போல, எனக்குப் புலனாகிறது. அதோ அந்த இலை, இப்போது என்னருகே வரு கிறது! பளபளக்கும் என்னுடைய உடலைப் பவழமலை என்று நினைத்து, எறும்பு என்மீது ஏற ஆரம்பித்து விட்டது. அதோ பாரம்மா, அந்த எறும்பு தனது தகுதி திறனை அறியாமல், சரிந்து கீழே விழுந்து, நீரில் மூழ்கி எழுவதை இஃது, சில பேதை மனிதர்களின் மன நிலையைப் போல - இல்லையா அம்மா? தாயே! பொய்யானத் தோற்றத்தை, ஏன் அளித்தாய்? வாழ வேண்டிய ஓர் உயிர், நீரில் மூழ்கிப் போய்விட்டதே! "அழுக்காறு கொண்டார்க்கு அதுவே சாலும்" என்று உலக, ஆசான் வள்ளுவன் கூறினானே. அஃது, இந்த எறும்பைப் போன்ற மனிதர்களுக்குத்தானா? மனித சகாப்தம் என்பதைக் காலம் ஒன்றால்தான் விளக்க முடியும். 181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/191&oldid=863541" இலிருந்து மீள்விக்கப்பட்டது