பக்கம்:தமிழஞ்சலி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அதற்குப் பனித்துளி என்று நான் தெரியாமல் பெயர் வைக்கிறேன். அந்தப் பனித்துளி, கடலோரத்திலே இருக்கின்ற கிளிஞ்சலில் ஒய்யாரமாகக் குந்துகிறது. இந்த உவமை எதற்கு? மனிதர்கள் வானத்தின் வலிவால், அற்பமான இடத்தில் சிதறி விழுகிறார்கள். அவர்களை மேலே இருக்கிற சக்தி கூர்ந்து கவனிக்கிறது. ஆட்டம் போட நினைத்தப் பணித்துளி. அறுந்து போகின்ற தறிநூலைப் போல நைந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்கிறது.இதற்காக இரக்கப்படுகிறவர்கள் யாருமில்லை! அதோ, தொடுவானத்தில் - அன்புக் கரங்கள் பனித்துளியின் தலையை வருடுகின்றன. உன்னுடைய பிறப்பு இறப்பில் முடிவதில்லை. என்னைப்போல நீ, மறுநாள் தோன்றுவாயென்று அதற்கு வாழ்த்துரை வழங்குகின்றது. எளியவர்களுக்கு, இது போல்தான் அண்ணாவும் வாழ்த்துரை வழங்கினார். குகையில் நெளிந்து கொண்டிருக்கும் - இருட்டிலேயே வாழ்க்கை நடத்தும் - சிறிய பூச்சிகளாக மனிதன் வாழு கிறான். 193

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/203&oldid=863554" இலிருந்து மீள்விக்கப்பட்டது