பக்கம்:தமிழஞ்சலி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி என் எண்ணத்திற்கு வந்த கருத்து அலைகளிடையே: நான் சிக்கித் தத்தளித்தேன். அவா ஒரு கானல் நீர்! மாயம்! நிலையற்றது! தேவையில்லாதது! கூடாதது! நினைத்தாலே பாபமானது! "உயரே போன ஒருவன் என்றாவதோர் நாள் - கீழே இறங்கத்தானே வேண்டும்!" "கீழே இறங்குபவன் மேலே ஏன் ஏற வேண்டும்?" "வானவில்லே அப்படித்தான்! நம்பக் கூடாது - அதை நம்பி நலிந்தவர்களிலே நானும் ஒருவன்!" தலை கீழாக விழுந்து அடிபட்ட பிறகு, நான் கொடுத்த தத்துவங்கள் அவை. அவ்வாறெனில்: எனக்கு மட்டும் அவாவென்பதே - அறவேயிலையோ? ஆசை வெட்கமறியாதது; கவலை நேரத்தில் தலை காட்டாதது. இன்பம் வருகிற நேரத்தில் - இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரியாதது. இது வேறு விஷயம்தான் இருப்பினும், இப்போது நான் இவ்விஷயத்தில் துறவி. இதயக் குமுறலை இயம்பி முடித்தேன். 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/42&oldid=863597" இலிருந்து மீள்விக்கப்பட்டது