பக்கம்:தமிழஞ்சலி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி மாதவிப் பூங்கொத்து என்பர் அதனை அம்மலருக்குப் புறவிதழ்கள் ஐந்துண்டு! இவ்வைந்து இதழ்களும் பசுமை நிறமாக இருப்பதால்: கபிலரெனும் கன்னித் தமிழ்ப் புலவர் அதனை, "பைங்குருக்கத்தி" என்ற பெயரைச் சூட்டினார் போலும்! அம்மலருக்கு ஐந்து அகவிதழ்களும் உண்டு! அவ்விதழ்களில் ஒன்றே ஒன்று மட்டும் மஞ்சள் நிறமுடையதாம்! மாதவிக் கொடியைக் கன்னட மொழியிலும் மாதவி என்றே அழைப்பர்! ஒரிய மொழியில் அதனை மாதபி என்றும், 'மாதபிளாதோ என்றும் கூறுவர்! தாவர நூலறிஞர்கள் அதனை ஆங்கிலத்தில் (MADA. BILOTA) மாடபிளோட்டா என்று அழைக்கின்றனர்! நல்ல பச்சை நிறங்கொண்ட அந்தத் தமிழ்க் கொடியின் பெயரைத்தான் ஆங்கிலத்திலும் வைத்துக் கொண்டனர்! பச்சை நிறத்தின் பெருமையைப் பார்! பார் - அதனைப் பாராட்டி ஆராய்ச்சி புரியும் தகுதியைப் பெற்றுவிட்டது! மாதவிப் பூங்கொத்துகள், அவை பூத்த சின்னாட்களில் உதிரும் பொலிவிழந்து வாடும்! இவ்வாறு பொலிவிழந்து நின்ற ஒரு மாதவிக் கொடியை சிலப்பதிகாரக் கதாநாயகன் கோவலன் கண்டானாம்! 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/53&oldid=863609" இலிருந்து மீள்விக்கப்பட்டது