பக்கம்:தமிழஞ்சலி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி வாழ்த்துப் பாடிற்று! உடன் பிறந்த பாசத்தால் உந்தப்பட்டோர் - அவரை அன்னனென்றனர்! கல்விப் பசிகொண்ட ஏழைகள், அறிஞர் என்று கழறினர்! கற்பனைக்குப் பொருள் தேடிக் காலமெலாம் காத்திருந்து, சொற்பல கிடைத்தாலும், சொர்னச் சுரங்கமாய் - கவிதையாக்கத் தலை குத்திக் கொள்ளும் சீத்தலைகள் - இல்லையென்றால் கவிஞர்கள் - அவரைக் கவிதைக்கு மூலமென்றனர்! அத்தகைய அண்ணனை - நானென்ன நவின்று: அழைப்பது? அன்னையின் அணைப்பறியேன். தந்தையின் இரக்கத்தை நான் என்றோ இற்றொ ழித்தேன். நீறொர்ந்த மீனென நிலச் சூட்டால் தவிக்கின்றேன்! காரொர்ந்த கூழெனப் பார்த்திருந்தேன் - ககனத்தை! வேரறுந்த பாட்டாக விளங்குகின்ற எனக்கெல்லாம், தாயாய் தந்தையாய் - தனிப் பெரும் தெய்வமாய் - அவர் இருக்கின்றார்: - அவரின் தாயுள்ளம் எனக்காகி, இந்த சேயுள்ளம் விளங்குதற்கு - நாளெலாம் வேண்டுகின்றேன். நல்லுறக்க நாட்டினிலும், அவிழும் கனவெலாம், அவரே விளக்கானார்! அந் நல்லோன் உளம் நினைந்து, நான் இவ்வாறு பாடிக் களிக்கின்றேன். 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/78&oldid=863649" இலிருந்து மீள்விக்கப்பட்டது