பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழரின் மறுமலர்ச்சி 11 எதிர்த்து யாராவது தமிழ்ப்பாட்டுப் பாடக் கூடாதா என்றால், நாடக மேடைபோல் ஆகிவிடுமே என்று நையாண்டி செய்வர். இது தமிழ்நாட்டில் பல காலமாக இருந்து வரும் வாடிக்கை. புரிந்து கொள்ள வேண்டாமா? இசை. இன்பத்தைத் தரவேண்டுமானால், அதைக் கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள யார் பாடல் வேண்டுமானால், முன்னால் பாடப்படுகிறதோ, அதை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடியதான மொழியில் இருக்க வேண்டும். இது அறிவுத் துறையில் அரிச்சுவடி! இதனை .ஆரிய மேதாவிகள்' மறுக்கின்றனர்! என்ன அறிவீனம்! நீக்ரோவின் நடனத்தைக் காண்கிறோம்; கண்டு விட்டு நகைக்கிறோம். ஆனால் நீக்ரோவுக்கு நெஞ்சு இழைகிறது நீக்ரோ நடனத்தைக் கண்டு! ஏன்? அதனைப் புரிந்து கொள்கிறான். நேற்று சித்தூர் பாடினார் அருமையாகப் புஷ்பராகத்தை ஜொலிக்கச் செய்து என்று கூறினால், புஷ்பராகம் என்று ஒரு ராகம் இருப்பதாக எண்ணிக்கொள்ள எத்தனையோ பேர்கள் உண்டு. அது அவர்கள் குற்றமல்ல; வராகம் என்று இன்னொரு ராகம் இருப்பதாக நம்பினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ராக விஷயங்கள், மக்களில் நூற்றுக்கு எத்தனை பேருக்குத் தெரிய முடியும்? கருப்பையா என்பதற்கு சுப்பையா என்று கையொப்பமிடும் பேர்வழிகள் நிரம்பியுள்ள நாட்டிலே நாம் இருக்கிறோம். கச்சேரிகளுக்குச் இன்னின்ன பாடல்கள் இன்ன ரசத்துடன் பாடப்பட்டன என்பதைப் பேசுவதைவிட மிருதங்கக்காரரின் உச்சிக்குடுமி இத்தனை முறை அவிழ்ந்து விட்டது; வித்துவான் மூன்றுமுறை பால் குடித்தார்; பிடில் வாசிப்பவரின் முகம் சென்று திரும்பியவர்கள்.