பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 39 எந்தப் பார்ப்பனர், மனு, 4-ம் ஆத்தியாயம்,15-ம் விதிப்படி இசை பயின்று, பொருள் ஈட்டக்கூடாது என்று தடுக்கப்பட்டு இருந்தனரோ. அதே ஆரியர்களின் சொத்தாக இசை இன்று கருதப்பட்டு வரும் நிலைமை ஏற்பட்டது. அரியக்குடியார் அலறுகிறார்; பாபநாசம் சிவன் பதறுகிறார்; மருங்காபுரியார் மனவேதனைப்படுகிறார் என்று 'இந்து'வும், 'மித்திரனு'ம் முகாரி பாடியபடி உள்ளன. தமிழரின் அடாணா வெளிப்படும்வரை இசைபற்றி இவர்கள் இரைச்சலிட்டபடிதான் இருப்பர். பாவ. ராக, தாளம் எனும் மூன்றும் இழைந்திருக்க வேண்டும் இசையிலே என்பர், இசை நூல் வல்லோர். பாவம் விளக்கமாக இருக்க, அவரவருக்குப் புரியும் மொழியில் பாடல்கள் இருந்தாக வேண்டும்.தமிழருக்குத் தமிழ்மொழியில் பாடல் இருந்தால்தான் புரியும்; சுவைக்க முடியும்; எனவே, தமிழ்நாட்டிலே தமிழ் இசைதான் முக்கியமாகத் தேவை. சுவைக்க முடியும் தமிழரின் இசைப்பற்று, தியாகய்யர் காலத்துக்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது, தெலுங்குக் கீர்த்தனங்கள் தோன்றா முன்னம், ராம கதையையோ, கிருஷ்ண கோலாகலத்தையோ. கீர்த்தனங்களாக அமைக்கா முன்னம் தமிழரின் இசை இறைவன். இயற்கை, இன்பம் எனும் மூன்று துறைகளை உள்ளடக்கியதாக உணர்ச்சியும் உற்சாகமும் தரத்தக்கதாக இருந்தது; இசைக் கருவிகள் எண்ணற்று இருந்தன; இசை நூற்களும் உண்டு. இசைக் கடலில் நீந்தி விளையாடி மகிழ்ந்தனர் மக்கள். ஆணும் பெண்ணும் பாடுவர். ஆடுவர். அரசனும், மக்களும் இசை பயின்றனர்; இன்புற்றிருந்தனர். மலையர்க MARAIMALA MABA