பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை

பண்டைத் தமிழ் வேந்தர் வெற்றிபெற்றவர்கள் எனக் கூறுவதெல்லாம், அவர் தம் படைத்தலைவர்கள் பெற்ற வெற்றிகளே ஆகும். அத்தகைய படைத் தலைவர் பலர் இலக்கியங்களில் காணப்படுகின்றனர். அவர்களுட் சிலர் இந்நூலில் இடம் பெற்றுள்ளனர்.

முதல் பன்னிருவர் சங்க இலக்கியங்களிலும், வில்லவன்கோதை சிலப்பதிகாரத்திலும், பரஞ்சோதியார் பெரிய புராணத்திலும், கருணாகரன் கலிங்கத்துப் பரணியிலும் காணப்படும் படைத்தலைவர்கள் ஆவார்கள். நரலோக வீரன் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட படைத்தலைவன் ஆவான்.

இப்பதினாறு படைத் தலைவர்களின் வீரம், கொடை, செயல் ஆகியவை இந்நூற்கண் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் மாணவர்க்கும் பெரியோர்க்கும் பயன்படத்தக்க கருவூலமாகும். இதனை வெளியிட இசைவளித்த ஆசிரியர்க்கு நன்றி!

வள்ளுவர் பண்ணையார்.