பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

29


இரந்து கேட்டுக்கொள்கிறேன். முதற்கண் மட்பாண்டத் தொழிலை எடுத்துக் கொள்வோம். தென் இந்திய நாகரீகத்தைக் கற்காலம் தொடங்கி வளப்படுத்திய, தொழில் சார்ந்த கலைகளில் தொடங்குவதற்கு அடித்தளம் இட்டவை, பீங்கான், மட்பாண்டங்களாம். நான்கு வகைக்காலப் பிரிவுகளை, வேறு பிரித்துக் காணலாம். 1) புதிய கற்காலம், 2) கற்கால இரும்புக் காலங்களின் இணைந்த காலம் 3) முழுமையான இரும்புக் காலம் 4) பொதுவாக வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலம் என அழைக்கப்படும், இரும்புக் காலத்துக்குப் பிற்பட்ட காலம் புதிய கற்காலத்துக்கே உரிய, மட்பாண்டங்கள், மங்கலான் வண்ணமும், கரடுமுரடான மேல்புறமும் உடையவை. இரும்புக்கால மட்பாண்டங்கள், பளிச்சிடும் வண்ணமும், மெருகேற்றப்பட்ட மேல்புறமும் கலைக்கண்ணோடு கூடிய வடிவமைப்பும் கொண்டவை. குவளை மற்றும் பாண்டங்களின் மீது மனித உயிரினங்களின் உருவங்கள் வரையப்படாமை, தென் இந்தியாவின் தொடக்ககால மட்பாண்டங்கள் ஒரு சிறப்பு இயல்பு. ஆனால் நீலகிரியில் உயிரினங்களின் வடிவங்களோடு கூடிய, கணக்கிலா மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை விலங்கு உருவங்களைப் போலவே மக்கள் உருவங்களையும் கொண்டுள்ளன. நீலகிரியில் உள்ள புதைமேடுகள், விட்டம் அல்லது கூம்பிய வடிவுடைய அடித்தளங்கள்மீது ஒடவிடப்பட்ட சக்கரங்கள், புறத்தே அழுத்தப்படாத குறியீடுகளைக் கொண்ட பாண்டங்கள், மாதிரி அச்சில் வார்க்கப்பட்ட கட்டுக்கம்பிணைப்புத் தகடு ஆகியவை இருந்தமைக்கான சான்றுகளைக் கொண்டுள்ளன. தக்ஷிண பீடபூமியில், இலைமாதிரி ஒப்பனைகள், முலாம்பழ வடிவிலான கிண்ணங்கள், மலர்வடிவிலான கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அழகு செய்யப் பெறாதன, மற்றும் அழகு செய்யப்பெற்றன ஆகிய இருவகைகளும் கிடைக்கப்பட்டுள்ளன. கைகளால் செய்யப்பட்டனவும்