பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டு

107



தள்ளி நடகொண்டாரோ!
காத்தடியா மூலையிலா
கர்ணனுக்குத் தொட்டி கட்டி
காத்தடிக்க நேர மெல்லாம்
கர்ணன் தொட்டில் வீணை இசையாம்
வெயிலடியா மூளையிலே
வீமனுக்குந் தொட்டி கட்டி
வெயிலடிக்க நேர மெல்லாம்
வீமன் தொட்டில் தானாட
தங்க வில்லை சேவுகரோ, உங்கமாமா
தரும வைத்தியரோ
செங்கல் சிகப்பரோ உங்கமாமா
சீமைக்கு அதிபதியோ!
அதிக சிகப்பரோட ஆசை மருமகனோ!
காஞ்சிவரத் தெண்ணை
கண்ணே கரிக்குதிண்ணு
தென் காசி எண்ணெய்க்கு உங்கப்பா
சீட்டெழுதி விட்டாக
வாசலிலே வண்ணமரம் உங்களப்பா!
வம்சமே இராச குலம்
இராச குலம் பெற்றெடுத்த
இரதமணியே கண்ணசர
பூனைப் பால் பீச்சி
புலிப்பால்ல உறையூத்தி
ஆனைப்பால் காயுதில்ல உங்களப்பா
அதிகாரி வாசலிலே
வெள்ளி முழுகி என் கண்ணே உன்னை
வெகு நாள் தவசிருந்து
சனி முழுகி நோம்பு இருந்து
நீ தவம் பெற்று வந்தவனோ!
பால் சங்கு போட்டி
பவள வாய் நோவுதின்னு
பொன் சங்கு வாங்க
போராக உங்களப்பா
கடைக்குக் கடைபார்த்து
கல் பதித்த சங்கு பார்த்து
எடைக்கு எடைபார்த்து
எதிர் எடைக்குப் பொன் வார்த்து