பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலாட்டு 113 குறிப்பு: அம்மான்-வன்னியன், தட்டான், சித்தாடை விலை மதிக்கும் அம்மான் என பலபேர் மாமன் முறையாக வருணிக்கப் படுகிறார்கள். குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பவர்கள், சமூக உறவுடையவர்கள்.

        வளர்ப்பு மகன்

தாய் தந்தையரை இழந்த குழந்தையை அத்தை தாலாட்டுகி றாள். பெற்றோர் இல்லாத குறையைப் போக்கத் தன்னையே அவனுக்குத் தாய் என்று கூறிச் செல்லமாகக் கொஞ்சுகிறாள்.

ஆத்திலே வண்ட லோட அக்கரையில் கதிர் மறைய மாலை மசுங்கையிலே மாமரம் சோலையிலே

அண்ணன் மகனே நீ அருமையான மருமகனே எனக்குமே மகந்தாண்டா என்னருமை பாலகனே

பெத்தவன் ஆத்தோட பேரு வச்சான் உகரோட கத்தவனே உவராஜா கண்ணே நீ கண்ணுறங்கு

       கண்ணுறங்கு 

ஆராரோ ஆரிரரோ-சாமி ஆறு லட்சம் வண்ணக் கிளி, செம்பவளத் தொட்டிலிலே-என் சீராளா நீ தூங்கு பச்சை வண்ணக் கட்டிலிலே பாலகனே நீ தூங்கு குருத்து வாழை போல-

              தொட்டிலிலே குதித் தாடும் பாலகனே 

மாம்பழ மேனியனே மயங்கி நீ கண்ணுறங்கு

மேலிரண்டு பாடல்களை இடம்: சேகரித்தவர்: அரூர் வட்டம், S.சடையப்பன் தருமபுரி மாவட்டம்.