பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டு சிறு வீடு மார்கழி மாதம் சிறுவர்கள் சிறுவிடு கட்டி விளையாடுவார் கள். அங்கே செங்கல் அடுப்புபோட்டு சிறு பொங்கல் பொங்குவார்கள். திருமணம், குடும்ப விவகாரங்கள் எல்லாம் இங்கே நடக்கும். வீட்டில் நடந்த தகராறுகள் இங்கே நாடகமாக நடிக்கப்படும். ஒரு சிறுமி தனது கணவனான சிறுவன், சோறு இல்லை என்ற காரணத்தால், தன்னை அடிக்க வந்ததைத் தோழியிடம் கூறுகிறாள்: நண்டு ஒன்று பிடித்து கையால் அரைத்து வைத்து கணவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தா ளாம். அவன் நெடு நேரம் வராததால் அவள் சாப்பிட்டு விட்டாளாம். அவள் சாப்பிட்டவுடன் அவன் வந்தானாம். உணவு இல்லை. அவன் அவளை அரட்டுவதையும் மிரட்டுவதையும் அவளே சொல்லட்டும். நண்டே நண்டே சிறு செங்கால் நண்டே, உசிரிருக்க ஓடிருக்க உன்னைப் பிளந்து, ஒரு குத்துப் புளியங்கா தொவையல் வச்சி, கன்னாங் கலத்தையும் கழுவி வச்சி, வருவான் வருவான்னு வழி பார்த்தேன் வராது போகவும் வழிச்சுக்கிட்டேன். வந்தாண்டியம்மா மலை வயித்தன், குத்தக் குத்த வந்தாண்டி குரங்குமூச்சி, ஏலகிரி யெல்லாம் கிடுகிடுக்க எடுத்தாண்டி சிலுக்குத் தடியை அடிக்க அடிக்க வந்தாண்டி ஆனைவயித்தன்,