பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 தமிழர் நாட்டுப் பாடல்கள்

சிறுக்கி போட்ட மையலாலே குதிரை வாலிக் கருது போல குறிச்ச பொண்ணு நானிருக்கேன் கூறு கெட்ட அத்தை மகன் குறத்தியோட சகவாசம் முளகாப் பழம் போல முத்தத்துல வந்து நிக்கேன் மூதேவி அத்தை மகன் முண்டச்சியிடம் சகவாசம் பதினெட்டுப் பணியாரம் மதிலெட்டிக் கொடுத்தாலும் இரவலடி என் புருஷன் எனக்குத் தான் சொந்தமடி அத்தாப்பு வீடு கட்டி அதுல ரெண்டு ஜன்னல் வச்சி எட்டி எட்டிப் பார்த்தாலும் என் புருஷன் தானேடி செட்டிக் கடை வெட்டி வேரு சிவகாசிப் பன்னீரு மதுரைக் கடைச்சக்களத்தி மறக்கப் பொடி போட்டா குதிரைவாலிக் கருது போல குறிச்ச பொண்ணு நானிருக்கேன் சரவட்டைக் கருதுக்காக சாம வழி போகலாமா? பூசணிக் கீரை தாரேன் புத்தி கெட்ட சக்களத்தி சாரணத்தி கரை தாரேன் சாமியத்தான் விட்டுரடி காலுரெண்டும் வட்டக்காலு கண்ணுரெண்டும் இல்லிக்கண்ணு இல்லிக்கண்ணு சக்களத்தி ஏசுராளே சாடையிலே

வாசமில்லாப் பூ

வள்ளியின் காதலன் முருகன். அவன் அக்கரைச் சீமைக்கு போய்விட்டான். அடுத்த ஆண்டில் வள்ளிக்கு மணமாகி விட்டது.