பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173 தமிழர் நாட்டுப் பாடல்கள் எழுதிய ஒடு போல எழுத்தாணிச் சட்டம் போல வாரிய ஒலை போல வளையுதே ஒங்க மேனி பட்டுக் கவரிலங்க பாளையத்து முத்திலங்க ஒட்டுக் கடுக்கனுக்கு ஒளி விடுதே ஒங்க தேகம் விசினார் கையல்லலோ விரிச்சார் தலைமுடியை பூசினார் திரு நீற்றை புருவக் கட்டை நேர் பார்த்து அள்ளி எறிஞ்சது போல் அஞ்சாறு தேமலுண்டு பருத்தி இலை போல படருதையா தேகமெல்லாம் கம்மங் கருதிலேயோ கணுவுக் கொரு கோணலுண்டு என் சாமி தேகத்துல எள்ளளவு கோணலில்லே தூத்துக்குடி யிலேயோ துரை மாரு ஆபீஸிலே பஞ்சு விலை மதிக்கும் வஞ்சிக் கொடி என் சாமி பெரிய கம்மா பரவு தண்ணி அதிலொரு நாள் ஸ்னானம் பண்ணி செங்க மங்கத் தண்ணியிலே தெரியுதையா உங்க முகம் மிஞ்சியோ மின்னுறது மேல் முருகோ கொஞ்சுறது தங்கத் துரைகளுக்கு தாயத் தோ மின்னுறது