தமிழர் நாட்டுப் பாடல்கள்
அவள்:
மொழுவிய திருணையிலே
எழுதிய பாய் போட்டு
பாயிலே உக்காருங்க
பல விதமாப் பேசிடலாம்
அவன்:
நண்டுகுழி மண்ணெடுத்து
நாகசுரம் உண்டுபண்ணி போறானாம் சிங்கக்குட்டி பெண்களைச் சிறையெடுக்க
அவள்:
அரிசி அரிக்கையிலே அரளிப் பூ தந்த மச்சான் சோறு வடிக்கையிலே சொக்குதையா உங்க ஆசை முல்லை அரும்பின்னில்லா முடிஞ்சேன் தலை நிறைய பாக்குரண்டி முல்லையின்னு பாத்தவங்க சொல்லலியே. கொடிக்கால் மண்ணெடுத்து கோலவர்ணக் குடம் செய்து பச்சக் குடம் தான் செய்யும்
பாவி குசவன் அவன்
அவன்:
பச்சைக்குடம் சமைக்கலியே
பாவத்தையும் ஏற்கவில்லை தாயார் சொன்ன சொல்லை தப்பாமல் செய்வேனடி
வட்டார் வழக்கு பச்சைக்குடம்-பலமில்லாதது. உடைந்து போகும் (காதல்.உறுதியற்றது).
குறிப்பு: பாவத்தையும் ஏற்கவில்லை-காதலை முறித்து அவளுக்குத் துன்பத்தை விளைவிக்கும் பாவத்தை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.