பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/354

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சமூகம் 363

எத்து களாய்ச் சில சொத்துக்களை

ஏமாத்தம் செய்தார் சாலை ஓரம்

தாயக்கர் கம்பள மீனம் பட்டி வழி

நாடிய கைம் பெண் ஒருத்தி

மத்தியானத்தில் ஒருத்தியைக் கொன்றானாம்

மூவர்கள் நாடார்கள் கொலை செய்த கைதிக்கு

ஏழுவருடம் கொடிய தண்டனைகள் தான் முடித்து

உலகில் சுத்துப் பட்டி நாயக்கர் தேவர்க்கும்

ஓங்கிய கோபம் தணியவில்லை

மாரினேரி ஓரம் பள்ளரைக் கொலை யொன்று

பத்து மணிக்குச் செத்ததனால்

காரியம் இல்லாக் குடும்பர்க்குக்

கோபம் இருந்தது சில நாளாய்

ஏப்ரல் மாதம் இருபத்தாறாந்தேதி

எனும் சிவகாசி மறவர் வாய்ப்புடன்

கடை கட்டும் அந்த வேலை வகுத்தார்

நாடார் விரோதங் கொண்டு

நாடார் சிலபேரும் கடைக் கெட்ட விடாமல்

தடுத்துக் கொண்டு

சண்டை பேட்டையில் தாக்கினான் அக்கினி

ஊக்கமாய் வல் உலகனும் மறவரும் சேர்ந்துமே

வன்மை நாடார்களைத்தான் விரட்டி மெல்லவே

காளியம்மன் பேட்டையில் தீ வைத்து

வேடிக்கை செய்தார் அந்நேரம்

சிங்கக்குட்டி ரெங்கா ராவுத்தர் பெற்றிடும்

செகு முகம்மது காசியும்

சங்கையில்லாமல் வாள் ஆயுதம் கொண்டார்

சாடின நாடார்கள் ஓடிவிட்டார்

வட்டார வழக்கு: கிள்ளாக்கு-கிளார்க்கு: மாஜிஸ்திரார் - மாஜிஸ்டிரேட், கெட்ட-கட்ட

குறிப்பு: இப்பாடல் நாடார்களுக்கு விரோதமான கட்சியார் எழுதிய பாடல்.

சேகரித்தவர்: S.S. போத்தையா

இடம்: விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.