உழவும் தொழிலும்
சேகரித்தவர்: S.M. கார்க்கி
சில நாட்களில் கமலை இறைப்பதில் தேர்ச்சி பெற்றுவிட்டான். அது கண்ட அவள் உளம் மகிழ்ந்து அவனைப் புகழ்கிறாள்.
கமலை யலங்காரம் கமலை மாடு சிங்காரம் கமலை யடிக்கும் மன்னருக்கு கருத்தப் பொட்டலங்காரம் சாலை யோரம் கிணறு வெட்டி சாஞ்ச கமலை போட்டு இழுத்து விடும் கருத்தத்துரை இனிக்குதையா கிணத்துத் தண்ணி மந்தையிலே கிணறு வெட்டி மயிலைக் காளை ரெண்டு பூட்டி சீதனம் கொடுத்தானே சிமிட்டி பாயும் கமலைத் தண்ணி
சேகரித்தவர். S.S.போத்தையா
சில ஊர்களில் கண்மாய்ப் பாசனம், ஆற்றுப் பாசனம் உள்ள இடங்களில் மண்வெட்டியால் தண்ணீரை விலக்கிவிட்டால் போதும் வேலை முடிந்தது. அவன் மடை திறந்து விட்ட நீரில் குளிப்பதில் அவளுக்குப் பெருமை, அவனுக்கும் தான்.
மண்வெட்டி கொண்டு மடை திறக்கப் போறசாமி மடையைத் திறந்து விடு மஞ்ச நீராடி வாரேன்
சேகரித்தவர்: S.S.போத்தையா