இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
508
தமிழர் நாட்டுப் பாடல்கள்
வயல் பார்க்கப் போனாலும் வயலும் பயிராகும் வந்தளக்கும் தோப்பாகும் சீமைக்கு அப்பாலே-சீமை ஆண்ட சேது பதி கட்டி வச்ச சீட்டாடும் மண்டபங்களே சீட்டுப் பறக்காது சிறுகுருவி லாந்தாது-என்னைப் பெத்த அப்பா சிட்டுப் பறந்திருச்சே-இப்போ சிறுகுருவி லாந்திருச்சே காசிக்கு அப்பாலே காசி ராஜா கட்டி வச்ச காத்தாடி மண்டபங்கள் காகம் பிறக்காது. கருங்குருவி லாந்தாது-என்னைப் பெத்த அப்பா காகம் பறந்திருச்சே-இப்போ கருங்குருவி லாந்திருச்சே பாலுற்றிச் சாந்திடுச்சி பவளமனை உண்டு பண்ணி பவளமனையிலேயும்- எங்கள் பாதம் பட்டால் தோஷமின்னு நெய்யூற்றிச் சாந்திடுச்சு நீலமனை உண்டு பண்ணி நீல மலையிலையும்-எங்க நிழல் பட்டால் தோஷமின்னு ஆத்து வயிரக் கல்லு அமைதியாப் புத்தகங்கள் ஆனு வழுக்கிட்டா-எங்களை ஆதரிப்பார் யாருமில்லை
குளத்து வயிரக் கல்லு கும்பினியார் புத்தகங்கள் குளமும் வழுக்கிட்டா-எங்களை கொண்டணைப்பார் யாருமில்லை பத்து மணி வண்டியேறி-நாங்க பசியாக வந்தாலும் பாலும் அடுப்பி லென்பார் சண்டாளி வாசலிலே பச்சரிசிச் சாதம் பா