பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508

     தமிழர் நாட்டுப் பாடல்கள்


    வயல் பார்க்கப் போனாலும் 
    வயலும் பயிராகும் 
    வந்தளக்கும் தோப்பாகும்
    சீமைக்கு அப்பாலே-சீமை 
    ஆண்ட சேது பதி கட்டி வச்ச 
    சீட்டாடும் மண்டபங்களே 
    சீட்டுப் பறக்காது 
    சிறுகுருவி லாந்தாது-என்னைப் 
                   பெத்த அப்பா 
    சிட்டுப் பறந்திருச்சே-இப்போ 
    சிறுகுருவி லாந்திருச்சே 
    காசிக்கு அப்பாலே 
    காசி ராஜா கட்டி வச்ச 
    காத்தாடி மண்டபங்கள் 
    காகம் பிறக்காது. 
    கருங்குருவி லாந்தாது-என்னைப் 
                   பெத்த அப்பா 
    காகம் பறந்திருச்சே-இப்போ 
    கருங்குருவி லாந்திருச்சே 
    பாலுற்றிச் சாந்திடுச்சி 
    பவளமனை உண்டு பண்ணி 
    பவளமனையிலேயும்- எங்கள் 
    பாதம் பட்டால் தோஷமின்னு 
    நெய்யூற்றிச் சாந்திடுச்சு 
    நீலமனை உண்டு பண்ணி 
    நீல மலையிலையும்-எங்க 
    நிழல் பட்டால் தோஷமின்னு 
    ஆத்து வயிரக் கல்லு 
    அமைதியாப் புத்தகங்கள் 
    ஆனு வழுக்கிட்டா-எங்களை 
    ஆதரிப்பார் யாருமில்லை


    குளத்து வயிரக் கல்லு 
    கும்பினியார் புத்தகங்கள்
    குளமும் வழுக்கிட்டா-எங்களை 
    கொண்டணைப்பார் யாருமில்லை 
    பத்து மணி வண்டியேறி-நாங்க 
    பசியாக வந்தாலும் 
    பாலும் அடுப்பி லென்பார் 
    சண்டாளி வாசலிலே 
    பச்சரிசிச் சாதம் பா