பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வங்கள்

55


பட்டுடுத்தி பணியுடுத்தி-ஏலேலோ கணபதியாம் பதினெட்டு நெல் வகையும்-ஏலேலோ கணபதியாம் கொறித்தெடுப்போம்-ஏலேலோ கணபதியாம்

சேகரித்தவர்:

இடம்:

கு. சின்னப்பபாரதி


பரமத்தி,


சேலம் மாவட்டம்.


பிள்ளையார் துதி

பிள்ளையார் முன்னிலையில் ஒரு பெண் வரங் கேட்கிறாள்.

 நத்தத்துப் பிள்ளையாரே நான் நடந்தேன் மாதாந்தம் கைக்குழந்தை தந்தியானா-உனக்கு கடைவிளக்கு நான் விடுவேன்.

சேகரித்தவர்:


கார்க்கி


இடம்:


சிவகிரி.