பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் பஞ்சமும் 75 தமிழகத்தில் ஏற்பட்ட, கொடிய பஞ்சமாகும். இன்றைக்கும் கூட நமது கொள்ளுப்பாட்டன், பாட்டிமார்களுடன் உட்கார்ந்து கதை கேட்போமேயானால் தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றி கதை கதையாகச் சொல்லுவார்கள். அந்தப் பஞ்சம் சரித்திரப் பிரசித்தமான ஒரு முக்கிய சோக நிகழ்ச்சியாக இருந்தது. உள்ளத்தை உலுக்கும் அவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்துங்கூட, அன்று வாழ்ந்த தமிழகப் பெரும் புலவர்கள், கவிஞர்களின் சிந்தையை ஏனோ தொடாமற் போய்விட்டது. ஒரு பேரிலக்கியத்தைப் படைப்பதற்கு வேண்டிய கருவைத் தன்னுள் கொண்டிருந்த அந்தக் கொடிய பஞ்ச நிகழ்ச்சிகள் அவர்களின் கண்ணில் படாமற்போனது விந்தையே. நாம் இன்று அதைப்பற்றித் தெரிந்து கொள்ள உதவுவதெல்லாம் சில நாடோடிப் பாடல்களே. ஒவ்வொரு பிரதேசவாரியாகத் தேடி னால், அவை கிடைப்பது திண்ணம். தாது வருடப் பஞ்சத்தை அனுபவித்து கொடுமைக்கும், கொதிப்புக்கும் ஆளான யாரோ ஒரு பாமரன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளப்பாடிய அந்தப் பாடலைச் சற்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள். வசதி படைத்தவர்களும், வாழ வழியின்றி பிழைப்புநாடி வெளியே சென்ற பின்னர் தங்கள் போலிக் கவுரத்தைக் காப்பாற்ற நினைத்து ஏளனத்துக்கு உள்ளாவதை நகைச்சுவை ததும்ப சுட்டிக்காட்டுவதையும் அதே பொழுதில் அதன் கோரப் பிடிப்பில் ஜனங்கள் சிக்கி, சித்திரவதைப்பட்டு மடிவதையும், உள்ளம் உருகும் வகையில் எடுத்துரைக்கும் பாடல் இது: (குறிப்புரை: சின்னப்ப பாரதி) பூரணமாகவே தாது வருஷமும் பிறந்ததுவே பஞ்சமும் அப்போதே காரணமாகத் தொடர்ந்ததுவே கும்மியடிக்கிறேன் கந்தன் கணபதி காப்பாரே சத்தியவாக்கருளாய் பால் நகர் சந்திரன் எத்திசை சேரும் நடராஜன்" அம்மன் சொல்படி பந்தியாய் நின்று பாடுவோமே கும்மி தாது வருஷத்தை தலை விதிப்படியேதான் மழையெங்கும் இல்லாமல் கன்னி மாதத்தில் ஓர் மழை பேயவும் கண்டெடுத்த ஒரு புதையலைப் போலவே நடராஜன்-எழுதியவர் பெயர்.