பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தாலாட்டு 83

வட்டார வழக்கு: கன்னாரே, பின்னாரே-பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).

இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச் செய்யாவிட்டால் மாமியார் முகம் கோணலாகிவிடும்.

 எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு விடாமல் சொல்லி வரும்.வங்காளத்தில் "பாரோமாசி" என்ற நாடோடிப் பாடல் வகை உள்ளது.அதில் பன்னிரெண்டு மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும் உழவு வேலைகளையும் ஒரு கதையோடு தொடர்புபடுத்திப் பாடுவார்கள்.இவற்றுள் எல்லா வகைகளைப் பற்றியும் "தூசன்ஸ்பக்விட்" என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர் ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். அவற்றுள் ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம் செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக் கூறப்படுகின்றன. உதாரணமாக எந்த மாதத்தில் ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த் தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும் என்பனவெல்லாம் வரிசைக் கிரமமாகக் கூறப்படும். பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக இருக்கும். உழவர் 'பாரோ மாசி தான் இவ்வகைப் பாடல்களிலேயே புராதனமானது. அவற்றிலிருந்து கதைப்பாடல்களும்,பக்திப்பாடல்களும் தோன்றியிருக்கின்றன. வங்காளத்துப் 'பாரோ மாசியைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில் தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள். இவ்வறிவுரை மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.

மார்கழி மாசத்திலேதான்

                 -கண்ணே நீ

மாராசாவைப் பார்க்கையிலே தைப் பொங்கல் காலத்திலே-

                - கண்ணே நீ தயிரும், சோறும் திங்கையிலே மாசி மாசக் கடைசியிலே- 
                  -கண்ணே நீ மாமன் வீடு போகையிலே பங்குனி மாசத்திலே-கண்ணே நீ பங்குச் சொத்தை வாங்கையிலே சித்திரை மாசத் துவக்கத்திலே- 
                 - கண்ணே நீ சீர் வரிசை வாங்கையிலே, வைகாசி மாசத்திலே-கண்ணே நீ வயலைச் சுற்றிப் பார்க்கையிலே