பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 தமிழர் நாட்டுப் பாடல்கள் கிண்ணத்திலே சந்தனமாம் கிளிமூக்கு வெத்திலையாம் சருகைத் தலைப்பாவாம் ஜாடை செய்யும் சால்வையாம் வட்டார வழக்கு: மொழுவி-மெழுகு போட்டா-புகட்டினால். சேகரித்தவர், இடம்: ம. கிருஷ்ணன், போத்தனூர், அனுப்பியவர்:சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி

         தாலாட்டு

வேட்டை சிறுவன் சிவகிரியில் பிறந்தவன். மலைச்சாரலில் மான், பன்றி, முயல் போன்ற விலங்குகள் உண்டு. மலைச்சாரல் பயிரைக் காப்பதற்கும், இறைச்சி பெறுவதற்காகவும் சிவகிரி இளைஞர்கள், கடிநாய் பிடித்து வேட்டைக்குச் செல்லுவார்கள். இவர்களுள், சிறுவனது மாமன்மாரும் இருக்கிறார்கள். சிறுவனது தாய் அவர்களைப் பற்றித் தனது தாலாட்டில் கூறி, அவனது வீர உணர்வுக்கு உரமிடுகிறாள். அவர்கள் வேட்டையாடித் திரும்பும்போது அவர்களை வரவேற்க தலைப்பாகை அணிந்து, வல்லவாட்டுப் போட்டு மருமகனை வாசலில் நிற்கச் சொல்லுகிறாள். மானல்ல ஓடுது, மறிடா நல்ல தம்பி மான் ஓடும் நேரமெல்லாம் தானோடி வந்தவனோ காட்டக் கலைத்து உன்மாமன் கடி நாயை ஏவிவிட்டு வேட்டைக்குப் போராக, வீரபுலி உங்கமாமன், பன்றி படுமோ, பதினெட்டு மான் படுமோ, சிங்கம் புலி படுமோ, உங்க சின்ன மாமன் வேட்டையில