பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி பவிக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டு மென்று கேட்டார்கள். ஒளி மிக்கவளே, தேவர்களின் சூழ்ச்சியை அறிந்து நான் கவலைப்படுகிறேன். இரவு பகலாக எனக்கு உறக்கமில்லை. அவர்களை அழித்து நிம்மதியாக ஓய்வு கொள்ள விரும்பு கிறேன்” என்ருன், அப்ஸு. தியாமத் இதனைக் கேட்டு உறுமினள். புயல்கள் வீசின. அப்ஸ் இவைப் பார்த்து அவள் விடை கூறினள். அவர்கள் பலசாலிகளாயினும் நம்மால் அவர்களை அழித்துவிட முடியும்.” இதைப்பற்றி இயா அறிந்தான், தீய தேவதைகள், தேவர்களை அழிக்க எண்ணிச் சூழ்ச்சி செய்வதைப் பற்றித் தெரிந்து கொண்டான். ஒரு மந்திரத்தால் அப்ஸுவையும் மும்முவையும் அழிந்து விடச் செய்தான். அவர்களது நண்பனு ைகிங்கு தியாமத்தைப் பார்த்து “மும்முவையும், அப்ஸ் அவையும் அழித்து விட்டார்கள். அதற்காக நீ பழிவாங்க வேண்டும், புயல் தேவியே” என்று கூறினன். "போர் துவங்கு” என்று தியாமத் கட்டளையிட்டாள். 'சூபர் தாய்’ என்ற மறுபெயர் கொண்ட தியாமத் பேய்களையும், ராட்சசப் பாம்புகளையும், மலைபோன்ற விஷ ஜந்துக்களையும், தீயுமிழும் டிரகான்களையும், படைத் தாள். மலேப் பாம்புகளையும், நச்சரவங்களேயும் புயல்வீசும் விலங்குகளையும், வேட்டை நாய்களையும், தேள் மனிதர் களையும், மீன் மனிதர்களையும், ராட்சஸ் ஆடுகளையும் படைத்தாள். கிங்குவைப் படைத் தலைவனுக்கிளுள். அவனை முதல் தேவன் என அறிவித்தாள். அவனை உயர்ந்த இருக்கையில் அமர்த்தி சிறந்த உடைகள் அணிவித்து அவனிடம் சொன்னுள். 'உன்னுடைய ஆணையைத் தேவர்கள் நிறைவேற்ற வேண்டும். நீயே யாவரினும் வலியவன். உன்னை நான் 98