பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டும் அகழ்வாராய்ச்சித் தலங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரண்டு தலங்களே அகழ்வாராய்ச்சியாளர் மிஸோலிதிக் அல்லது நியோதிலிக் பண்பாட்டுக் காலத் தலங்களாகக் கருதுகின்றனர். அதன் பின்னர் நான்கு கால வரிசைப்படி முறையான பண்பாட்டுக் கட்டங்களைக் காட்டும் தலங்கள் உள்ளன. தானியங்களைப் பயிரிடுதல், ஆடு மாடு வளர்த்தல் முதலிய தொழில்களில் வாழ்ந்த மக்களின் சுவடுகளை அகழ்வாய்வாளர்கள் கண்டுள்ளனர். உணவு சேகரிப்பும், மீன் பிடித்தலும் இங்கிருந்த மக்களின் தொழில்களா விருந்தன. நிலைத்த கிராமங்களுக்கருகே ஆடு, மாடு மேய்த்த குழுக்களும் இருந்தன. இவையிரண்டும் நாகரிகத்தை நோக்கி முன்னேறின. நாகரிகத் துவக்க காலத்தில் பாபிலோனியாவில் பல சிறு தகர ராஜ்யங்கள் இருந்தன. அவை ஒன்ருேடு ஒன்று போரிட்டுக் கொண்டன. அந்த நகரங்களின் போர்வீரர்கள் செம்புக் கோடரிகள், ஈட்டிகள், கத்திகள், தலைக்கவசங் களேப் பயன்படுத்தினர். - ஹா லாபியன் காலகட்டத்தில் பெண்களின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன. சரித்திர காலகட்டத்தில் இவை இஷ்டாரின் உருவங்களாக இருக்கலாம். அதற்குப் பின்னுள்ள காலகட்டத்தில் ஆண் சிலைகள் அருகியே காணப் படுகின்றன”. . இச் சான்றுகளிலிருந்து இக் கதைகளைப் புனைந்தவர்களது வாழ்க்கை நிலையை அறிகிருேம். முழுக்கதையையும் வழங்கி வந்த பண்டைய பாபிலோனிய மக்கள் நாகரிக முற்ற காலத் தவர். மெரோடாக்கை ஏக தெய்வமாக வழிபட்டவர்கள் தங்கள் நகர ராஜ்யங்கள் ஒன்ருக இணைக்கப்பட்டு ஒரரசன் கீழ் வந்தபொழுது. பல தேவர்களுக்கும் மேலாக ஒரு தேவனே, ஒரு தேவ ராஜனே கற்பனை செய்தல் இயல்பே, 113