பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தில், முன் ஆரியர்கள், ஆரியரல்லாதவர்களிடமிருந்து ஏற்றுக் கொண்ட கடவுள் என்று விஷ்ணுவையும் நாராயண அனயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிருர்கள். விஷ்ணு வேதத்தில் சிறு தெய்வம். நாராயணன் வேதக் கடவுளன்று. நாரா என்ருல் நீர் என்பது சம்ஸ்கிருதத்தில் பொருள். நீரின் மீது உறங்குபவளுகப் பண்டைப் புனைகதைகள் அவனே சித்தரிக்கின்றன. அவன் பாம்பின் மீது உறங்குபவன். 'பாம்பு பண்டைய இனங்களின் குலக்குறி' நாராயணனைத் தெய்வமாகக் கொண்ட வளர்ச்சி பெற்ற இனக்குழுக்கள் ஏதோ ஒரு நாகக் குலக் குறியுடைய இனக்குழுவை வென்ற தால் இது அவனுடைய படுக்கையாக ஆக்கப்பட்டது. நாராயணன் பாற்கடலில் பாம்பின் மீது உறங்குகிருன், அவனது நாபியிலிருந்து ஒரு தாமரை தோன்றுகிறது. அதிலிருந்து லட்சுமியும், பிரமனும், சந்திரனும் தோன்று கிருர்கள். பிரமன் உலகைப் படைத்தான். இக் கதையில் பாற்கடலும், ஆண் உலகத்தைப் படைத் த.இம், மாடு மேய்ப்பவர்களின் கற்பனைகளாகவும், கருத்துக் களாகவுமே தோன்றுகின்றன. இனி இக்கதைகள் அனைத்திலும் உலகு 孪 1. பெண்ணுல் படைக்கப்பட்டது. 2. ஆணுல் படைக்கப்பட்டது. 3. பெண் ஒரு பகுதியையும், ஆண் மற்ருேர் பகுதியை யும் படைத்தார்கள். - என்ற மூன்று கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றி லும் சமூக அமைப்பு எவ்வாறு இக்கருத்துக்கள் தோன்றக் காரணமாயிருந்தன என்பதைக் கூறியுள்ளோம். இங்குச் சமுதாய மாற்றங்கள் எப்படி படைப்புக் கருத்தையும், படைப்புத் தெய்வங்களின் ஆண் அல்லது பெண்பாலையும் தீர்மானிக்கின்றன என்று காண்போம். * பண்டையச் சமுதாயங்களிலும், இன்றைய பழங்குடிச் சமுதாயங்களிலும் ஆளுதிக்கம் அல்லது பெண்ணுதிக்கம் 3.35