அனுமானம் இருத்தல் வேண்டுமென்று அனுமான முறை அல்லே விதித்தார்களேயன்றி அனுமானமே அறிவு பெறும் வாயில் அன்று என மறுக்கவில்லை. அனுபவத்தை விட்டு விலகி அனுமானத்தால் மட்டும் ஆன்மீக வாதிகளும், ஆத்திகர்களும், மிமாம்சகர்களும் வந்த முடிவுகளே அவர்கள் மறுத்து, அதற்கு அனுபவ ஆதாரங்களைக் கேட்டார்கள், உதாரணமாகக் கீழ்வரும் அனுமான முறையை (analogica: ாeasoning) லோகாயதர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. 1) பாண்டத்தைப் பார்த்தவுடன் இதைச் செய்த குயவன் உண்டேன்று அனுமானம் செய்கிருேம். 2) அது போலவே உலகத்தைப் பார்த்ததும் இதைப் படைத்த கடவுள் உண்டென்று அனுமானிக்கலாம்." முதல் தர்க்கமுறை உலகாயதருக்கு உடன்பாடு. ஏனெனில் அதன் பகுதிகள் அனுபவத்தால் உறுதிப்படும். இரண்டாவது அவர்களுக்கு உடன்பாடன்று. ஏனெனில் அதன் பகுதிகள் அனுபவத்திற்கப்பாற்பட்டது. நிரூபணத்துக் குட்படாதது. - மணிமேகலை தத்துவத்தின் முதலிரண்டு கூறுகளைப் பற்றிவிஞ எழுப்பாததால் நாமும் அதற்குமேல்லோகாயதன் கற்றுப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. - இனி நீலகேசியின் பூர்வபட்சமாகப் பூதவாதி கூற்று எவ்வாறு கூறப்படுகிறது. ஜைனர்களின் மதுப்பு எத்தகையது என ஆராய்வோம். மதனஜித் என்ற அரசனது அவையில் பிசாசகன் என்ருேர் பூதவாதி இருந்தான். அவனைப் பார்த்து "உன் தத்துவமிருந்தவாறு சொல்லுவாங்” என்று நீலகேசி கேட்க அவன் சொல்லத் தொடங்கினன்; 858 ... ... ... ... ... ." ... ... 857 குணி, குணம் எனும் கூற்றிலகுலதென் துணிவைம்பூதங்கனே தொழில் சொல்லுவேன். 243
பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/242
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை