பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் கேட்டனர். ஆதாரங்களோடு விடையளிக்க முடியாத விளுக்களுக்குக் கதைகளைப் புனைந்து அவற்றையே விடிையாக அளித்தனர். விஞ்ஞான ஆய்வுகளும், சிந்தனை வளர்ச்சியும் ஏற்பட்டிராத காலத்தில் பண்டைய மக்கள் இயற்கையைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் இத்தகைய விடைகளையே கண்டுபிடித்திருக்கிரு.ர்கள் என்பு தைப் பண்பாட்டு மானிடவியல் விளக்குகிறது. இப்புனே கதைகளின் தோற்றம் பற்றி ஆண்டிரூ லாங் கூதுவதாவது :- 2 - 'பண்டைய மக்களின் சடங்காச்சாரங்களினின்றும் (Rite) இக்கதைகள் எழுகின்றன. மனிதனது இயல்பு பற்றி யும், பிரபஞ்சத்தின் மூலாதாரம் பற்றியும் தத்துவ பூர்வ மான சிந்தனைகளாக இப்புனைகதைகளைக் கருத முடியாது. பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்ற விளுவிற்கு இவை கற்பனையான விடை என்று கொள்ளுவதற்கில்லை” இதனே ஈ. ஓ. ஜேம்ஸ் அவர்கள், படைப்புக் கதைகளும் சாவின் துவக்கமும் மனித இனத்தின் அழிவும் பல புனைகதைகளின் கருப் பொருள்களாக இருப்பினும் அவை தத்துவ விளக்கங் களாக இல்லை என்பது.ஆண்ட்ரூ லாங் கூறுவது போல உண் மையே' என்றுகூறுகிருர். 2 பண்டைய மக்கள் சடங்காச்சாரங்களே வாழ்க்கையில் நலன்களைப் பெற மிக அவசியமெனக் கருதினர். மழை பெய்யவும், பயிர் வளரவும், காய்,கிழங்குகள் கிடைக்கவும், நோய்நொடிகள் வராமல் இருக்கவும், வேட்டையில் விலங்குகள் கிடைக்கவும், புயல் போன்ற இயற்கை விபத்துகள் நேராமல் இருக்கவும் நிகழ்த்தினர். இலையுதிர் காலம் முடிந்து வசந்தகாலம் துவங்குகிற போது பருவ மாறுதலை வரவேற்றும், வசந்த காலத்தில் பயிர்கள் செழித்து வளரவும் பண்டைய மக்கள் சடங்குகளே நடத்தினர். காலங்களை மனித உருவங்களாகக் கற்பனை செய்து ஒரே தெய்வம் இறந்து மறுபடி உயிர்பெறுவதாக நம்பி, சடங்குகள் நடத்தினர். - 93