பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எகிப்திய பிரமிட் கோபுரங்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களிலிருந்து ஆஸிரிஸ் என்ற பருவங்களின் தெய்வம் இறந்து மறுபடி உயிர்த்தெழும் கதையையும், சடங்குகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. தாலமி அரசனின் கல்வெட்டுக்கள் இச்சடங்கு விழா நடைபெற்ற விதத்தைக் கூறுகிறது. இவ்விரண்டு சான்றுகளிலும் கதாநாயகர்களின் பெயர்கள் வேறுபட்ட போதிலும் அவர்களின் இயல்பும், கதையின் நிகழ்ச்சிகளும் ஒன்ருகவே இருக்கின்றன. இத் தெய்வங்களின் உருவத்தை மண்ணுலும், பார்வி வைக்கோலாலும், மணலாலும் செய்து தங்கநிற வர்ணம் பூசிஞர்கள். எகிப்திய மாதமான கோயாக் மாதம் 12 ஆம் நாள் விழாத் தொடங்கும். 24ஆம் நாள்வரை அதனைப் புனித முழுக் காட்டுவார்கள். பின் அதனை ஒரு படகில் வைத்துப் பாபைரஸ் என்ற நாணலால் செய்யப்பட்ட 24 படகுகள் புடைசூழ நீரினுள் செலுத்துவார்கள். படகு களில் மொத்தம் 364 விளக்குகளை ஏற்றுவார்கள். 24ஆம் தேதி ஆவிரிவின் உருவத்தை, பிணத்தைப் பதனிட்டு மம்மி ஆக்குவது போல ஒரு மம்மியைப் போல அலங்கரிப்பார்கள். அதன்பின் ஒரு சவப்பெட்டியில் அதனை கிடத்துவார்கள். உருவத்தின் கீழ் விதைகளைப் பரப்பி வைப்பார்கள். 30ஆம் நாள் சிவப் பெட்டியை ஒர் அறையில் வைத்துப் பூட்டு வார்கள். இப்பொழுது ஆஸிரிஸின் இறந்து போன நிகழ்ச்சி சடங்காக நடிக்கப்பட்டு விட்டது. இனி உயிர்த்தெழும் நிகழ்ச்சியையும் ஆஸிரிஸின் கோவிலிலுள்ள சிற்பங்கள் காட்டுகின்றன. வட எகிப்தில் காணப்படும் பாழடைந்த ஆஸிரிஸ் கோவில் சுவர்களில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களிலிருந்து உயிர்த்தெழும் சதையை அறிய முடிகிறது. மம்மியாகக் கிடக்கும் ஆஸிரிஸைச் சூழ்ந்து பல தெய்வங்கள் நிற்கின்றன. அனுபிஸ்ஐஸிஸ், நெப்திஸ் முதலிய தெய்வங்களும் பசுத்தெய்வமான ஹாதோரும், அவளுடைய சகோதரன் ஹெகட்டும் ஆஸிரிஸின் உடலருகில் நிற்கிருர்கள். உயிர்த்தெய்வமான தவளைத் தெய்வும் g3