பக்கம்:தமிழர் மதம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'இடை நிலை யியல் காது (கக) தொழுகை நூற் புணர்ப்பு திருக் கோவில்களி லெல்லாம், என்றும் பிராமணரே பூசகரா யிருந்து சமற்கிருதத்தில் வழிபாடு நடத்துமாறு, 'ஆகமம்', "தந்திரம்' முதலிய தொழுகை நூல்களை அமைத்துக் கொண்ட னர். ஆகமம் - தோன் றியம் (புதிதாகத் தோன்றியது). (20) தொன்ம மறவளப்புத் தொடர் சொற்பொழிவுகள் பிராமணரைத் தெய்வமாக வுயர்த்தியும் அவர்க்குத் தொண்டு செய்வதை வற்புறுத்தியுங் கூறும், தொன்ம (புராண) மறவனப்பு (இதிகாச)க் கதைகளைத் தொடர்ந்து ஊர்தொறும் விழாக் காலங்களில் இசையொடு சொல்லி வந்ததனால், ஆரியப் பற்று பொதுமக்கள் உள்ளத்திற் பசுமரத் தாணி போற் பதிந்து, அரத்தத்தோ டரத்தமாய்க் கலந்து ஊறிப் போயிற்று. பாரத இராமாயணத் தொடர் சொற்பொழிவுகள், இன்றும் நடைபெறு கின்றன. ஈ.. ஆரியத்தால் விளைந்த கேடுகள் (க) தமிழ மதக் கேடு வேள்வி வளர்ப்பு | fr அவிசொரிந் தாயிரம் வேட்டலன் றொன்றன் உயிர்செகு துண்ணாமை நன்று.” (குறள். உருகூ) என்று திருவள்ளுவர் கண்டித்திருந்தும், பல்வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆரியப் பல்சிறு தெய்வக் கொலை வேள்வி நெறியைத் தழுவினான், அவனைப் பின்பற்றுமாறு, மாங்குடி மருதனாரும் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யனை வேண்டினார். கரிகால் வளவன், பெருநற் கிள்ளி முதலிய சோழ வேந்தரும், பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேரன் செங் குட்டுவன் முதலிய சேர வேந்தரும், முதுகுடுமி போன்றே கழி மடம் பட்டனர். பேதை வேந்தரை யேமாற்றி இருபத்தொரு வேள்வியும் முடித்த பூஞ்சாற்றூர்ப் பிராமணனை, ஆவூர் மூலங் கிழார் மானமிழந்து மதிகெட்டுப் பாடியுள்ளார். சோழனும் பாண்டியனும் தன்னை இகழ்ந்தா ரென்று செங்குட்டுவன் வெகுண்டபோது, மாடல வேதியன் அவனைப் புகழ்ந்து சினந் தணிவித்து வேள்வி வியற்றச் சொன்னது, நச்சுத் தன்மையான வலக்கார மாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழக அறிவியற் கட்டிட அடிப் படைக் கல் நாட்டிய போது, தில்லையிலிருந்து ஒரு பிராமணர் வந்து எரி வளர்த்து வேத மந்திரம் ஓதினார். இது ஆரிய வழி பாடே யன்றித் தமிழ் வழிபாடாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/125&oldid=1429705" இலிருந்து மீள்விக்கப்பட்டது