பக்கம்:தமிழர் மதம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ககக தமிழர் மதம் சிவநெறிச் செலவு, புலான் மறுத்தல், துப்புரவு, ஒழுக் கம் ஆகியவையே, சிவமடத் துறவியர் ஆசிரியர் இலக்கண மாய் அமைதல் வேண்டும். இன்று தி. மு. க. ஆட்சி ஏற்பட்டிருப்பதால், பிராமண வழக்கறிஞரைப் பற்றி அஞ்ச வேண்டுவ தில்லை. பிராமணியத்தி னின்று தப்ப முடியாதவர் பிறவியி னின்று ஒருகாலும் தப்ப முடியாது. கூரை யேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவனா கோபுர மேறிக் குடக் கூத்தாடுவான்? சிவ மடங்கள் திருந்தா விடின், எதிர் காலத்தில் தமிழாட்சி வத்து திருத்தும்; அல்லது பொதுவுடைமை யாட்சி வந்து, மூன்ருங் குலோத்துங்கச் சோழன் காலத்துக் குகை யிடி கலகம் போன்ற கிளர்ச்சி யெழும். கூ, சைவ சித்தாந்த மகா சமாசச் சிவத் தொண்டு. பிராமணர் மட்டுமன்றி வையாபுரிப் பிள்ளை போன்ற தயி முரும்,மெய் கண்டார் இயற்றிய சிவஞான போதம்' வட மொழி 'ரௌரவ' ஆகமத்தின் மொழி பெயர்ப் பென்று, நீண்ட கால மாகப் பிதற்றி வந்தனர். திரு. ம. பால சுப்பிரமணிய முதலியார், மறுக்க முடியாத க20 கரணியங் காட்டி, 'சிவஞான போதம் தமிழ் முதனூலே, மொழி பெயர்ப் பன்று' என்று நாட்டிய அரிய ஆராய்ச்சிச் சவ சித்தாந்த மகா சமாசம், காசு-ஆம் ஆண்டு தன் வைர விழா வெளியீடாக வெளியிட்டது, சிவனியரும் தமிழரும் மிகப் பாராட்டி மகிழத் தக்க தொன்றாம். ச'. காஞ்சிக் காமக் கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரை கடந்த தமிழ் வெறுப்பு. சில ஆண்டுகட்கு முன், இற்றைக் காஞ்சிச் சங்கராச்சாரி யார், ஆண்டாள் திருப்பாவை' யின் செய்யா தன செய்தோம் தீக்குறளை சென்றேதோம் என்னும் அடியிலுள்ள " தீக்குறா சென்றேதோம்' என்னும் தொடருக்கு, தீய திருவள்ளுவரின் குற ேயாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்ன தாகப் பொது மேடையிற் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/152&oldid=1429653" இலிருந்து மீள்விக்கப்பட்டது