பக்கம்:தமிழர் மதம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வருநிலை பியல் கசக தமிழ் நாட்டில் உருவிலா வழிபாடு பதினெண் சித்தர் காலத்தில் தோன்றிய தென்றும், கிறித்துவிற்குப் பிற்பட்ட தென் றும், தவறாகக் கருதப் படுகின்றது. உலகில் முதன் முதல் கடவுளை உணர்ந்தவர் தமிழறிவரே. கடவுள் என்னும் சொல், குமரிநாட். டில் தலைக் கழகக் காலத்திலேயே தோன்றிய தாகும். முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந் தொகுக்கப் பட்ட தொல்காப்பியத்தில், கடவுள் என்னுஞ் சொல் ஆளப் பட்டிருத் தல் காண்க. ஆரியர் வந்தபின், கடவுட் சமயம் மறைக்கப் பட்டது. கட வுள் என்னும் சொல்லின் பொருளும் குறைக்கப் பட்டது. ரு. இந்து மதம் என்னாது தென்மதம் எனல் (க) இந்து என்பது வடநாடுகளுள் ஒன்றின் பெயரான சிந்து என்பதன் திரிபு. சிந்து = ஓர் ஆறு, அது பாயும் நாடு. சிந்து என்னும் பெயர் பாரசீகத்தில் ஹிந்து எனத் திரிந்தது. பிற்காலத்தில் அதினின்று இந்தியா என்னும் பெயர் கிரேக்கத்தில் தோன்றிற்று. வேத ஆரியர் முதன் முதல் சிந்து வெளியில் தங்கி யிருந் ததனால், ஹிந்து என்பது நாளடைவில் நாவலந் தேயம் முழுமைக்கும் பெயராயிற்று. ஆரியர் தம் வேள்வி மதத்தொடு தமிழ் மதங்களையும் இணைத்து, அக் கலவையைத் தம தென்று காட்டி, இந் தியா முழுதும் பரவி இந்தியர் எல்லாரும் அக் கலவை மதத்தைத் தழுவும்படி செய்து விட்டதனால், ஹிந்து என்னும் தேசப் பெயர்,அத் தேச மக்களையும் அம் மக்கள் மதத்தையும் குறிக்கலாயிற்று. அது தமிழில் இந்து எனத் திரிந்தது. (உ) இந்து மதம் என்பது, ஒரு தனி மதமன் றி ஆரியமும் தமிழமுஞ் சேர்ந்த கலவை மதம். இந்து மதத் தெய்வங்களான முத்திரு மேனிகளுள், படைப்புத் தொழில னான நான் முகன் (பிரமன்) என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/159&oldid=1429660" இலிருந்து மீள்விக்கப்பட்டது