பக்கம்:தமிழர் மதம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை க. மதம் என்னும் சொல் வரலாறு ஆறு, நெறி, கொள்கை, மதம், சமயம் என்பன ஒருபொருட் சொற்கள். இவற்றுட் பின்னிரண்டும் வடமொழி யென்னும் சமற் கிருதத்திலும் வழங்குவதாலும், அம்மொழி பிறமொழியி னின்று கடன் கொள்ளாத தேவமொழி யென்னும் நம்பிக்கை இடைக் காலத் தமிழருள்ளத்திற் பதிக்கப் பட்டிருந்ததனாலும், அவ்விரு சொல்லும் வடசொல்லே யென்று இன்றும் கருதப்பட்டு வருகின்றன. முத்துதல் - க. பொருந்துதல் அல்லது சேர்தல். "திரு முத்து ஆரம் - திருமகள் சேரு மாரம்; “கழை போய் விண் முத் தும் என்றாற்போல." (சீவக.ரு0ச, நச். உரை). உ.மென் மையாகத் தொடுதல். ௩. முத்தமிடுதல். " புதல்வர் பூங்கண் முத்தி (புறம். சக). முத்து -முட்டு. முட்டுதல்- க. வன்மையாகத் தொடுதல், மோதுதல்." துள்ளித் தூண் முட்டுமாங் கீழ்" (நாலடி. ௬ச). உ.முட்டித் தாங்குதல். ௩. முடிதல். "மூட்டடி யின்றிக் குறைவு சீர்த்தாகியும்” (தொல். பொ. சரு). க.முட்டு. தகரம் மென்மையையும் டகரம் வன்மையையும் உணர்த் தும். ஒ.நோ : ஒத்து-ஒட்டு, குத்து - குட்டு. முட்டு - தாக்கு, பொருத்து, முடிவு. மூட்டு - மட்டு - முடிவு, அளவு. முத்து -மத்துஅளவு. மத்து- மத்தி-மதி. மதித்தல்-க.அளவிடுதல். '"மண்விழைந்து வாழ்நாண் மதியாமை" (திரிகடு. உகூ). உ.கருதுதல். "ஆடலை மதித் தான்" (கந்தபு. திருவிளை. க). ௩.பொருட் படுத்துதல். "மண்ணாள்வான் மதித்துயிரேன் (திருவாச.ரு: கஉ). மதி- அளவிடப்பட்ட பண்டம். எ - டு : ஏற்றுமதி, இறக்கு மதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/17&oldid=1428972" இலிருந்து மீள்விக்கப்பட்டது