________________
பின்னிணைப்பு க.தமிழ்நாட்டரசின் திருக்கோவில் வழிபாட்டுச் சீர்திருத்தம். ஆரியர் வருமுன், குமரிநாட்டுச் சிவன் (சேயோன்) கோவில்களிற் குருக்கள் அல்லது பண்டாரம் என்னும் வகுப் பாரும், திருமால் கோவில்களில் நம்பிமார் என்னும் வகுப்பாரும், காளி கோவில்களில் உவச்சர் என்னும் வகுப்பாரும், பூசையும் பொதுவழிபாடும் தனித் தமிழில் நடத்தி வந்தனர், திருக் கோலிற் பாணிகளைக் கவனித்தற்கு, ஊர்தொறும் காரவைப் பிரிவான கோயில் வாசியம் என்னும் குழு விருந்தது. தலை நகர்களிலும் கோநகர்களிலும் உள்ள பெருங்கோவில்களில், அரசரின் நேரடி, யாட்சிக்குட்பட்ட முது கேள்வி (Supervising officer), இளங் கேள்வி (Subordinate supervising officer) என்னும் இரதிகாரிகள் இருந்து வந்தனர். நீண்ட காலமாகப் புன் சிறு தெய்வங்களையே போற்றி வந்த வரும் கடவு ளியல்பை யறியா தவருமான ஆரியர், கி. பி. டு-ஆம் தூற்றண்டின் பின்னரே, மூவேந்தரையும் பல்வேறு வகையில் வயப்படுத்தி, 'ஆகமம்', 'சங்கிதை', 'தந்திரம்' என்னும் மூவகைத் தொழு மறைகளை இயற்றி, பிராமணரே திருக்கோவில் களில் வழிபாடு செய்து வருமாறு திட்டஞ் செய்து விட்டனர். தமிழர் கோவில்களில் ஆரிய ராட்சி புகுந்தது,கறையான் புற்றிற் பாம்பு குடி கொண்டது போன்றதே. ஆதலால், எதற்கும் அஞ்சாதும் எவ் வெதிர்ப்பையும் பொருட்படுத்தாதும், பின் வருமாறு சீர்திருத்தங்களை உடனடி யாகச் செய்வது தமிழ் நாட்ட ரசின் தலை மேல் விழுந்த தலையாய கடமையாம். (க) கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல். (உ) அவ் வம் மத நம்பிக்கையும் தெய்வப் பத்தியும் கல்வித் தகுதியும் பணிப் பயிற்சியும் தூய வொழுக்கமும் உள்ள, பல வகுப்பாரும் பூசகராக அமர்த்தப் பெறல்.