பக்கம்:தமிழர் மதம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இயவு - இயவுள் எல்லா வுயிர்களையும் வழிநடத்தும் இறைவன். இய்-இ-இயல் - செலவு. " புள்ளியற் கலிமா’’ (தொல். பொ. ககூச). எ இயலுதல் - செல்லுதல், நடத்தல். (ஐங்.கஎரு). "அரிவையொடு மென்மெல வியலி'" இய-இயங்கு - இயக்கு-இயக்கம். இயங்குதல் செல்லு தல், நடத்தல், அசைதல். இய் - வ.அய். இனி, உய் என்பதும் அய் என்று திரிந் திருக்கலாம். தமிழ் ஆரியத்திற்கு முந்தியது என்னும் வரலாற்றுண்மை யையும், மேற்காட்டிய சொல் வரலாறுகளையும், நடுநிலையாக நோக்குவார்க்கு, மதம் சமயம் என்னும் இருசொல்லும் தென் சொல்லே யென்பது, தெற்றெனத் தெரியாமற் போகாது. ௩. மதம் தோன்றிய வகை. (க) அச்சம் காய்கனி கிழங்கு முதலிய இயற் ைக விளைபொருளையும் வேட்டையாடிய விலங்கு பறவை யிறைச்சியையும் உண்டு வாழ்ந்து, அநாகரிக நிலையிலிருந்த முந்தியல் மாந்தர்; தீயும் இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்பு போலும் நச்சுயிரிக் கும், இறந்தோ ராவிகட்கும் அவற்றுள் ஒரு சாரனவான பேய் கட்கும், அஞ்சிய அச்சமே தெய்வ வணக்கத்தை அல்லது சிறு தெய்வ மதத்தை முதற்கண் தோற்றுவித்தது. கொல்லுந் தன் மையுள்ள எல்லாவற்றையும் தெய்வமாகக் கொண்டு, அவை தம்மைக் கொல்லாவாறு இயற்கையும் செயற்கையுமாகிய உண வுப் பொருள்களைப் படைத்தும், இருதிணை யுயிரிகளையும் காவு கொடுத்தும், வந்தனர். நாகரிகம் முதிர்ந்துள்ள 'இக்காலத்தும், இம்மையிலும் மறு மையிலும் நேரக்கூடிய துன்பங்கட்கு அஞ்சுவதே, பல்வேறு மதவொழுக்கங்கட்கும் பெரும்பாலும் அடிப்படைக் கரணியமா யிருக்கின்றது. அச்சத்தினாற் படைப்பதெல்லாம் தீமைவிலக்கலைக் குறிக் கோனாகக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/23&oldid=1428865" இலிருந்து மீள்விக்கப்பட்டது